British

போதை பொருள் வைத்திருந்ததாக துபாய் சிறையில் வாடும் 23 வயது பிரிட்டிஷ் விமானப் பணிப்பெண்!

Editor
போதைப் பொருள் வைத்திருந்ததாக துபாயில் பணியாற்றி வந்த இங்கிலாந்தைச் சேர்ந்த இளம் பெண் கைது செய்யப்பட்டுள்ளார். உடல் பரிசோதனையில் போதைப் பொருள் பயன்படுத்தவில்லை என்று தெரிந்த பிறகும் அவரை விடுதலை செய்யாமல் துபாய் போலீசார் அலைக்கழித்து வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. துபாய் உள்ளிட்ட வளைகுடா நாடுகளில் போதைப் பொருள் வைத்திருந்தால் மிகக் கடும் தண்டனை வழங்கப்படும். இந்த நிலையில் பிரிட்டனைச் சேர்ந்த இளம் பெண் ஒருவர் போதைப் பொருள் வைத்திருந்ததாக துபாயில் கைது செய்யப்பட்டுள்ளார். துபாய் எமிரேட்ஸ் விமான நிறுவனத்தில் சிப்பந்தியாக பணியாற்றி வந்த டெரின் கிரவ்ஃபோர்டு என்ற பெண் தன்னுடைய பாய் ஃபிரெண்டுடன் முதன் முறையாக டேட்டிங் சென்று திரும்பிய நிலையில் கைது செய்யப்பட்டிருப்பது சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. டெரின் லிவர்பூலைச் சேர்ந்தவர். ஜூன் 21ம் தேதியில் இருந்து அவர் துபாயின் மிக மோசமான அல் பர்ஷா சிறையில்...