லண்டனில் 20 மீட்டர் உயர கிரேன் சரிந்து விழுந்ததில் பலத்த சேதம் ஏற்பட்டது. நான்கு பேர் காயம் அடைந்தனர். பலரும் இடிபாடுகளுக்குள் சிக்கியிருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது. அவர்களை மீட்கும் பணியில் மீட்புப் படையினர் ஈடுபட்டுள்ளனர்.
கிழக்கு லண்டனில் குடியிருப்பு கட்டுமானப் பணியில் ஈடுபட்ட கிரேன் சரிந்து விழுந்தது. 20 மீட்டர் (65 அடி) நீளம் கொண்ட அந்த கிரேன் சரிந்து விழுந்ததால் இரண்டு மாடி வீடுகள் சேதம் அடைந்தன. இதில் நான்கு பேர் காயம் அடைந்தனர். இரண்டு பேர் உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். இரண்டு பேருக்கு சம்பவ இடத்திலேயே மருத்துவ உதவி வழங்கப்பட்டது.
இந்த கிரேன் விழுந்ததால் வீட்டுக்குள் பலரும் சிக்கியிருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது. அவர்களை மீட்கும் பணியில் போலீசார் மற்றும் மீட்புப் படையினர் ஈடுபட்டுள்ளனர்.
கிரேன் சரிந்து விழுந்ததால் ஏற்பட்ட சேதம் குறித்து பலரும் சமூக ஊடக தளங்களில் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பதிவிட்டு வருகின்றனர். சம்பவத்தை நேரில் பார்த்த ஒருவர் கூறுகையில், “கிரேன் ஓட்டுநர் அதிர்ஷடவசமாக தப்பினார். வீடுகள் மீது விழுந்ததால் சிலர் உள்ளே சிக்கியிருக்க வாய்ப்புள்ளது” என்றார்.