31ம் தேதி நள்ளிரவு பிரிட்டன் வெளியேறுகிறது – பிரெக்சிட் ஒப்பந்தத்திற்கு நாடாளுமன்றம் ஒப்புதல்

28 நாடுகள் இடம்பெற்றுள்ள ஐரோப்பிய யூனியன் கூட்டமைப்பில் இருந்து வெளியேறுவதாக இங்கிலாந்து அறிவித்தது. இது தொடர்பாக, 2016ல், மக்களிடம் கருத்து கேட்டு நடத்தப்பட்ட வாக்கெடுப்பில் பெரும்பான்மை ஆதரவு கிடைத்ததை அடுத்து, ஐரோப்பிய யூனியனில் இருந்து இங்கிலாந்து வெளியேறுவதற்கான நடவடிக்கைகள் தொடங்கின.

ஆளும் கன்சர்வேடிவ் கட்சிக்கு பாராளுமன்றத்தில் போதிய ஆதரவு இல்லாத நிலையில், 2 முறை இங்கிலாந்து பாராளுமன்றத்திற்கு தேர்தல் நடந்தது. இரண்டு முறை பிரதமர்களும் மாறினர்.

அறிஞர்கள், ஆராய்ச்சியாளர்களுக்கு விரைவில் விசா – பிரிட்டன்

தற்போதைய பிரதமர் போரிஸ் ஜான்சன் முயற்சியால் பிரெக்சிட் வரைவு மசோதா அந்நாட்டு பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. அதேபோல், ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து இங்கிலாந்து வெளியேறும் முடிவிற்கான பிரெக்சிட் மசோதாவுக்கு இங்கிலாந்து ராணி இரண்டாம் எலிசபெத் தனது ஒப்புதலை அளித்தார்.

இந்நிலையில், ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரிட்டன் முழுவதும் வெளியேறுவதற்கான ஒப்பந்தத்திற்கு ஐரோப்பிய நாடாளுமன்றம் ஒப்புதல் அளித்துள்ளது.

இதுகுறித்து ஐரோப்பிய பாராளுமன்ற தலைவர் டேவிட் சசோலி கூறுகையில், “ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரிட்டன் வெளியேறுவதற்கான ஒப்பந்தத்திற்கு ஐரோப்பிய பாராளுமன்றம் வாக்களித்து ஒப்புதல் வழங்கியுள்ளது. இனி ஐரோப்பிய ஒன்றியம், பிரிட்டன் விலகுவதற்கான இறுதி ஒப்புதலை அளிக்க வேண்டும், அதன் பின்னர் (2020) ஜனவரி 31ம் தேதி நள்ளிரவு, ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரிட்டன் முறையாக வெளியேறலாம்.

முதல் முறையாக, ஒரு ஐரோப்பிய ஒன்றிய உறுப்பு நாடு ஒன்றியத்தை விட்டு வெளியேறுகிறது. இது வருத்தமளிக்கக்கூடியது என்றாலும், ஐரோப்பிய பாராளுமன்றம் பிரிட்டன் மக்களின் விருப்பத்திற்கு எப்போதும் மதிப்பளிக்கிறது” என கூறினார்.

விஜய் மல்லையாவுக்கு தொடர்புடைய சொத்துகளை விற்க பிரிட்டன் கோர்ட் உத்தரவு