20,000 கொரோனா இறப்புகளை நெருங்கும் இங்கிலாந்து – ஒரே நாளில் 768 பேர் பலி

UK Tamil News: உலகம் முழுவதும் 210 நாடுகளுக்கு கொரோனா வைரஸ் பரவியுள்ளது. தற்போதைய நிலவரப்படி 28 லட்சத்து 26 ஆயிரத்து 847 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. வைரஸ் பாதிக்கப்பட்டவர்களில் 18 லட்சத்து 48 ஆயிரத்து 610 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

வைரஸ் பரவியவர்களில் 7 லட்சத்து 81 ஆயிரத்து 256 பேர் சிகிச்சைக்கு பின் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். ஆனாலும், இந்த கொடிய வைரசுக்கு இதுவரை ஒரு லட்சத்து 96 ஆயிரத்து 981 பேர் பலியாகியுள்ளனர்.

பிரிட்டன் கற்ற பாடம் – மாட்டிக் கொண்ட தமிழகம்

சீனாவில் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸ் தற்போது அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளை புரட்டி எடுத்து வருகிறது. ஐரோப்பிய நாடுகளில் இத்தாலி, ஸ்பெயின், பிரான்சுக்கு அடுத்தபடியாக கொரோனா தற்போது இங்கிலாந்தில் நிலை கொண்டுள்ளது.

தற்போதைய நிலவரப்படி, இங்கிலாந்து நாட்டில் ஒரு லட்சத்து 43 ஆயிரத்து 464 பேருக்கு வைரஸ் பரவியுள்ளது. குறிப்பாக நேற்று ஒரே நாளில் புதிதாக 5 ஆயிரத்து 386 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

மேலும், அந்நாட்டில் வைரஸ் தாக்குதலுக்கு நேற்று ஒரே நாளில் 768 பேர் பலியாகியுள்ளனர். இதனால் அந்நாட்டில் கொரோனாவுக்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை 19 ஆயிரத்து 506 ஆக அதிகரித்துள்ளது.

இங்கிலாந்தில் கொரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை 20 ஆயிரத்தை நெருங்கியுள்ளதால் அந்நாட்டு மக்கள் மிகுந்த அச்சமடைந்துள்ளனர்.