குடும்ப தகராறில் 2 பிஞ்சு குழந்தைகளைக் கொலை செய்த ஈழத் தமிழர் தாமும் கத்தியால் குத்திக் கொண்டு தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இலங்கை யாழ்ப்பாணத்தில் வடமராட்சி கிழக்கு மாமுனையை சேர்ந்தவர் நிதின்குமார். இவர் இங்கிலாந்தின் லண்டனில் குடும்பத்துடன் வசித்து வருகிறார்.
வெளிநாட்டு விமான பயணிகளை 2 வாரம் தனிமைப்படுத்த முடிவு – இங்கிலாந்து நடவடிக்கை
நிதின்குமார் டிபார்ட்மெண்ட் ஸ்டோர் ஒன்றில் பணிபுரிந்து வந்தார். இந்த நிலையில் நிதின்குமார் மனைவி திடீரென வீட்டை விட்டு வெளியே வந்து தமது பிள்ளைக் கைப்பாற்றுமாறு கதறி இருக்கிறார்.
இது தொடர்பாக பக்கத்து வீட்டார் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து அங்கு விரைந்த போலீசார் நிதின்குமாரின் 2 பிஞ்சு குழந்தைகள் கத்தியால் குத்தப்பட்டு ரத்த வெள்ளத்தில் மிதந்ததை கண்டு அதிர்ந்தனர்.
மேலும் நிதின்குமாரும் கத்தியால் குத்தி தற்கொஐ செய்ய முயன்றதும் தெரியவந்தது. இதில் 2 பிஞ்சு குழந்தைகளும் மரணமடைந்தனர். நிதின்குமார் உயிருக்கு ஆபத்தான மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.