லண்டன் நட்சத்திர ஹோட்டலில் பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்… ஒரு வழியாக நியாயம் கிடைத்தது!

பாலியல் வன்கொடுமைக்கு ஆளான எமிலி (Image: Dan Jones)

லண்டனில் ஹோட்டல் ஒன்றில் முன்பின் அறிமுகம் இல்லாத ஆடவர் ஒருவருடன் சுயநினைவிழந்து இரவு முழுவதும் இருந்த பெண்ணை வீடியோ எடுத்த நபருக்கு நீதிமன்றம் தண்டனை வழங்கியுள்ளது.

41 வயதான எமிலி ஹண்ட் ஒரு நாள் சிரிப்பு சத்தம் கேட்டு கண் விழித்து பார்த்தபோது லண்டனில் நட்சத்திர ஹோட்டல் ஒன்றில் கிறிஸ்டோபர் கில்லிக் (40) என்பவருடன் இருந்துள்ளார். 300 பவுண்ட் வாடகை வாங்கும் ஹோட்டலுக்கு எப்படி வந்தோம் என்று அவருக்குத் தெரியவில்லை. முந்தைய நாள் தன் தந்தையுடன் உணவருந்திவிட்டு, ஒரு கிளாஸ் ஒயின் குடித்தது மட்டுமே அவருக்கு நினைவில் இருந்தது.

தட்டுத் தடுமாறி எழுந்து, ஓய்வறைக்குச் சென்று போலீசுக்கு தகவல் கொடுத்தார். அவர்கள் விரைந்து வந்து எமிலியை மீட்டனர். அதற்குள்ளாக அவருக்கு அதிர்ச்சி காரணமாக மாரடைப்பு ஏற்படவே மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

நிர்வாண வீடியோ எடுத்ததை ஒப்புக்கொண்ட கிறிஸ்டோபர் (Image:South West News Service)

தனக்கே தெரியாமல் தன்னை அழைத்து வந்து, பாலியல் வன்கொடுமை செய்திருப்பதாக எமிலி நம்பினார். ஆனால், எமிலியின் வாதத்தை யாரும் ஏற்கவில்லை. இது தொடர்பாக அவர் போலீசில் புகார் கூறியபோதும், அதை எடுத்துக்கொள்ள நீதிமன்றம் தயங்கியது.

யாரும் அவரை நம்பாத நிலையில் மன நலம் பாதிக்கப்பட்டு தற்கொலை செய்து கொள்ளும் அளவுக்கு சென்றிருக்கிறார் எமிலி. கடைசியில் அதில் இருந்து தப்பி சட்டப் போராட்டத்தை தொடர்ந்தார். ஐந்து ஆண்டு சட்டப் போராட்டத்துக்குப் பிறகு அவருக்கு நீதி கிடைத்துள்ளது.

இந்த விவகாரம் தொடர்பாக போலீசார் கிறிஸ்டோபரை கைது செய்தனர். அவரிடம் இருந்து ஆணுறை, வயாகரா உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்தனர். விசாரணையின்போது, எமிலியின் விருப்பத்தின் பேரிலேயே அவருடன் உறவு கொண்டதாக கிறிஸ்டோபர் கூறினார். ஆனால், எமிலி அனுமதியின்றி 62 விநாடி வீடியோ ஒன்றை எடுத்ததாக ஒப்புக்கொண்டார். இதுவே அவருக்கு தண்டனை வழங்க வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்துள்ளது.

வழக்கையொட்டி நீதிமன்றத்திற்கு வந்த எமிலி (Image:South West News Service)

தேம்ஸ் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் நடந்த வழக்கில், “எமிலியை ஒரு பாரில் சந்தித்தேன். அவருடன் உறவுகொள்ள விரும்பினேன். அவர் விருப்பத்துடன் ஹோட்டலுக்கு சென்றோம். ஒரு தேநீர் கொண்டு வருவதற்குள் எமிலி தூங்கிவிட்டார். அவள் அருகில் சுய இன்பம் செய்ததுடன், எதிர்காலத்தில் சுய இன்பம் செய்வதற்காக அவளின் நிர்வாண கோலத்தை வீடியோவை எடுத்தேன்” என்று ஒப்புக் கொண்டார். இதைத் தொடர்ந்து அவருக்கு 26 வாரங்கள் சிறை தண்டனை வழங்கப்பட்டுள்ளது.

இது குறித்து எமிலி கூறுகையில், “இது ஓரளவுக்கு வெற்றி. இனி புதிய வேலை, புதிய ஆண் நண்பர், புதிய வாழ்க்கையைத் தொடங்குவேன்” என்றார்.

இங்கிலாந்து செய்திகளை தமிழில் தெரிந்துகொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்…

Facebook : https://www.facebook.com/tamilmicsetuk/

Twitter : https://twitter.com/tamilmicsetuk