லண்டன்: இந்திய பெண் கொலை வழக்கில் திருப்பம்… மகனே கொலை செய்த கொடூரம்!

Son, charged, murder , கொலை,

லண்டனில் இங்கிலாந்து வாழ் இந்தியப் பெண் ஒருவர் கொலை செய்யப்பட்ட விவகாரத்தில் அவரது மகனை போலீசார் கைது செய்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மேற்கு லண்டன் கிரீன்ஃபோர்டில் உள்ள ட்ரூ கார்டனில் பெண்மணி ஒருவர் தாக்கப்பட்டதாக கடந்த புதன் கிழமை போலீசாருக்கு தகவல் வந்தது. அதன் அடிப்படையில் போலீசார் மற்றும் ஆம்புலன்ஸ் சேவை ஊழியர்கள் அங்கு சென்றனர்.

தலையில் காயத்துடன் காணப்பட்ட அந்த பெண்மணி இறந்துவிட்டதாக மருத்துவப் பணியாளர்கள் அறிவித்தனர். இதைத் தொடர்ந்து கொலை வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடந்து வந்தது.

படுகொலை செய்யப்பட்ட பெண் இங்கிலாந்தில் வாழும் இந்தியர் என்பதும் கொலை செய்ததாக சொந்த மகனே கைது செய்யப்பட்டிருப்பதும் தற்போது தெரியவந்துள்ளது.

கொலை செய்யப்பட்ட பெண்ணின் பெயர் ஹன்சா பட்டேல் (வயது 62). இவர் மருத்துவமனை ஒன்றில் பணியாற்றி வந்துள்ளார்.

கொரோனா பரவல் அதிகரித்த நிலையில் இவரது கணவர் மருத்துவ மனை பணியை ராஜினாமா செய்யச் சொல்லியுள்ளார்.

இதைப் படிச்சீங்களா: இங்கிலாந்தின் கொரோனா ஆர் விகிதம் 1க்கு கீழ் குறைந்தது!

இதனால், வேலையை ராஜினாமா செய்துவிட்டு வீட்டிலேயே இருந்துள்ளார். இவரது மூத்த மகன் லண்டனில் வேறு பகுதியில் வசித்து வந்தார். இளைய மகன் மற்றும் கணவருடன் ஹன்சா பட்டேல் கிரீன்ஃபோர்டில் உள்ள ட்ரூ கார்டனில் வசித்து வந்தார்.

இந்த நிலையில் ஹன்சாவின் மகன் ஷானில் பட்டேல் (31) தன்னுடைய தாயைத் தலையில் அடித்து கொலை செய்திருப்பதை போலீசார் கண்டறிந்துள்ளனர். குடும்ப பிரச்னை காரணமாக நடந்திருக்கலாம் என்று தெரிகிறது.

இதைத் தொடர்ந்து ஷானின் பட்டேலை போலீசார் கைது செய்து விம்பிள்டன் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.

இங்கிலாந்து செய்திகளை தமிழில் தெரிந்துகொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்…

♦ Facebook

♦ Twitter