சர்ரே, 20 செப்டம்பர் 2020: சர்ரேயில் பப்புக்கு வெளியே இளம் பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்தததாக சந்தேகத்தின் அடிப்படையில்,
16 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் இரண்டு பேரை போலீசார் கைது செய்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அவர்கள் இருவரும் போலீஸ் விசாரணையின் கீழ் உள்ளனர்.
சர்ரேயில் எப்சம் டவுன் சென்டருக்கு அருகே உள்ள பப் ஒன்றின் வெளியே இளம் பெண் ஒருவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதாக போலீசாருக்கு நேற்று இரவு 9.30 மணி அளவில் புகார் வந்தது.
இதன் அடிப்படையில் அங்கு விரைந்து வந்த போலீசார் சந்தேகத்தின் அடிப்படையில் இரண்டு பேரை கைது செய்தனர்.
அவர்கள் இருவரும் 16 வயதுக்குக் கீழ் உள்ள சிறுவர்கள் என்பது தெரியவரவே போலீசார் அதிர்ச்சி அடைந்தனர்.
அந்த பகுதி சுற்றி வளைக்கப்பட்டு, பாதைகள் அடைக்கப்பட்டு போலீசார் தீவிர ஆய்வில் இறங்கினர். இது குறித்து துப்பறியும் ஆய்வாளர் ஆண்டி ஸ்கொக்லண்ட் கூறுகையில்,
“பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு உடனடியாக உதவி, போலீசுக்கு தகவல் தெரிவித்து, ஆரம்பக்கட்ட விசாரணையின் போது தேவையான தகவல்களைத் தந்த மக்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.
சர்ச் வீதியில் உள்ள யே ஓல்ட் கிங்க் ஹெட் பப் முன்பு நடந்த அசம்பாவிதம் தொடர்பாக பல சாட்சிகளிடம் விசாரித்துள்ளோம்.
இது தொடர்பாக வேறு யாருக்கும் தகவல் தெரிவித்தால் தகவல் தெரிவிக்கலாம். பொது மக்கள் தங்களிடம் சம்பவம் தொடர்பாக சிசிடிவி கேமரா காட்சி, டேஷ்கேம் வீடியோ இருந்தால் எங்களுக்கு அளிக்கலாம். அது விசாரணைக்கு உதவியாக இருக்கும்” என்றார்.
இங்கிலாந்து செய்திகளை தமிழில் தெரிந்துகொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்…