பிரிட்டனில் ஒரே நாளில் 563 பேர் பலி – கொரோனா பாசிட்டிவ் 29,474 ஆக உயர்வு

UK coronavirus death rate 563 die in ONE DAY taking total to 2,392

இங்கிலாந்தின் கொரோனா வைரஸ் இறப்பு விகிதம் மேலும் 50 சதவீதம் அதிகரித்துள்ளது. ஒரே நாளில் 563 பேர் மரணித்துள்ளனர்.

இதனால்,கொரோனா வைரஸுக்கு பலியான மொத்த நோயாளிகளின் எண்ணிக்கை 1,789 லிருந்து 2,352 ஆக உயர்ந்துள்ளது.

அதேசமயம், தொற்றுநோய் பரவுவதால் பிரிட்டனில் கொரோனா வைரஸுக்கு பாதித்தவர்கள் எண்ணிக்கையும் 25,150 லிருந்து 29,474 ஆக உயர்ந்துள்ளது.

பிரிட்டனில் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளதால் வீடுகளில் மக்கள் முடங்கியுள்ளனர்.

ஆனால் ஆடுகள் இந்தச் சூழலைப் பயன்படுத்தி சாலைகளில் சுற்றித் திரிகின்றன. Llandudno நகரில் அந்தச் சம்பவம் நடந்தது.

அமைதியாக காணப்படும் நகரில் ஆடுகள் வலம் வருகின்றன. சுமார் 100 ஆடுகள் புல்வெளிகளில் மேய்ந்து பொழுதைக் கழிக்கின்றன.

மக்கள் வீடுகளில் இருந்தபடியே விலங்குகளை ரசித்துவருகின்றனர்.