பிராட்ஃபோர்ட்: கோழிகளிடம் பாலியல் அத்துமீறல் செய்த நபருக்கு 3 ஆண்டு சிறை!

சிறை தண்டனை பெற்ற கணவன், மனைவி. (Image: AUSSIE FARMS)

பிராட்ஃபோர்டில் கோழிகளிடம் பாலியல் வன்முறையில் ஈடுபட்ட 37 வயது நபருக்கு மூன்று ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கப்பட்டுள்ளது.

இங்கிலாந்தின் பிராட்ஃபோர்ட்டைச் சேர்ந்தவர் 37 வயதான ரெஹான் பேக். இவர் தன்னுடைய வீட்டின் கீழ்ப் பகுதியில் கோழிகளை வளர்த்து வந்துள்ளார்.

கோழிகளிடம் பாலியல் நடவடிக்கையில் ஈடுபடுவது அவருக்கு பொழுதுபோக்காக இருந்துள்ளது. சம்பவத்தன்று கோழிகளிடம் அவர் பாலியல் ஆசையைத் தீர்த்துக் கொண்டுள்ளார்.

இதில் மிக மோசமான முறையில் தாக்கப்பட்ட கோழிகள் சில மணி நேரங்களில் துடிதுடித்து உயிரிழந்துள்ளன.

இவ்வளவையும் ரெஹான் பேக்கின் மனைவி வீடியோ எடுத்துள்ளார். கணவனுக்கு துணையாக அவரும் இருந்துள்ளார்.

தன்னுடைய கணவனின் சாகசம் என்று நண்பர்களுக்கு அந்த வீடியோவை பகிர்ந்த போது இருவரின் கொடூர, வக்கிரமான முகம் உலகுக்குத் தெரியவந்தது.

சமூக ஊடகங்களில் அந்த வீடியோ வைரல் ஆகவே, மக்கள் அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக போலீசார் அந்த வீடியோக்களை முடக்கினர். மேலும் ரெஹான் பேக் மற்றும் அவரது மனைவி ஹலீம் ஆகியோர் மீது வழக்குப் பதிவு செய்தனர்.

அவர்கள் வீட்டில் நடந்த போதனையில் கம்ப்யூட்டர், லேப்டாப் உள்ளிட்டவற்றில் இது போன்று ஏராளமான வீடியோக்கள் எடுத்திருப்பதைக் கண்டு போலீசார் அதிர்ச்சி அடைந்தனர்.

பல நிற கோழிகளிடம், வெவ்வேறு உடைகளில் அவர்கள் பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். நாயுடனும் செய்யப்பட்ட வீடியோ கிடைத்துள்ளது.

தன்னுடைய கணவன் கோழிகளிடம் பாலியல் வன்கொடுமை செய்து கொண்டிருக்கும் போது அவருக்கு அருகில் வந்து தன்னுடைய பாலியல் வேட்கைகளைத் தீர்த்துக் கொண்டிருக்கிறார் ஹலீம். இப்படி பல வீடியோக்கள் கிடைத்துள்ளன.

இதைத் தொடர்ந்து, அவர்கள் இருவர் மீதும் பிராட்ஃபேர்ட் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இதில் தங்களின் வக்கிர செயல்களை ஹலீம் ஒப்புக்கொண்டார்.

வழக்கை விசாரித்த நீதிபதி, இவர்களின் நடத்தை மோசமான, இழிவானது, வெறுக்கத்தக்க மற்றும் வக்கிரமானதாக இருந்தது. சமூகத்தின் எந்தவொரு நபருக்கும் இந்த வீடியோ வலியை ஏற்படுத்தும் என்று கூறி ரெஹானுக்கு அவரது மனைவிக்கும் மூன்று ஆண்டு சிறை தண்டனை விதித்தார்.

இங்கிலாந்து செய்திகளை தமிழில் தெரிந்துகொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்…

♦ Facebook

♦ Twitter