கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்காக, பிரிட்டன் இளவரசர் சார்லஸ் வீடியோ கான்பரஸ் மூலம், புதிய தற்காலிக மருத்துவமனையை திறந்து வைத்தார். இந்த மருத்துவமனை லண்டனில் உள்ள பிரதான கண்காட்சி மையத்தில் அமைந்துள்ளது.
கடந்த ஒரு வாரமாக கொரோனா தொற்று காரணமாக தன்னை தனிமைபடுத்தி கொண்டிருந்த இளவரசர் சார்லஸ் இந்த மருத்துவமனையை திறந்து வைத்தபோது உணர்வுபூர்வமாக உணர்ந்ததாக குறிப்பிட்டார்.
கொரோனா – ஆயுர்வேத சிகிச்சையால் நலம் பெற்றாரா இளவரசர் சார்லஸ்? உண்மை என்ன?
இந்த லண்டன் நைட்டிங்ஹேல் மருத்துமனையில் 4 ஆயிரம் பேர்தங்கி சிகிச்சை பெறும் வசதி உடையதாக உருவாக்கப்பட்டுள்ளது.
நம்பமுடியாத அளவிற்கு 9 நாளில் உருவாக்கப்பட்ட இந்த கட்டுமான பணியில் ஈடுபட்ட ராணுவ வீரர்கள் உட்பட அனைவருக்கும் நன்றி தெரிவித்தார் இளவரசர் சார்லஸ்.