14 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை விவகாரம்… 20 வயது இளைஞரை கைது செய்த மான்செஸ்டர் போலீஸ்!

வன்கொடுமை
சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட பகுதி (Image: Google).

கடந்த ஜூலை மாதம் மான்செஸ்டர் டேல் வீதியில் 14 வயதான சிறுமி ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட விவகாரத்தில் தேடப்பட்டு வந்த இளைஞரை போலீசார் கைது செய்துள்ளனர்.

கடந்த ஜூலை மாதம் 11ம் தேதி மாலை 5.15 மணி அளவில் மான்செஸ்டரில் உள்ள டேல் வீதிக்கு அருகே வாய்க்கால் கயிறு பாதை பகுதியில் 14 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாக காவல்துறைக்குத் தகவல் வந்தது. உடனடியாக மாலை 6.50க்கு எல்லாம் போலீசார் அங்கு சென்று விசாரணை நடத்தினர். பாலியல் வன்கொடுமை சம்பவத்துக்கு முன்பு சிறுமி மற்றும் அவரது நண்பர்களை இளைஞர்கள் குழு ஒன்று தொந்தரவு செய்ததாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

சிறுமிக்கு மருத்துவ உதவிகள் மற்றும் மனநல பாதிப்புக்கான கவுன்சலிங் வழங்கப்பட்டது. சிறுமியின் குடும்பத்தினருக்கும் சிறப்பு நிபுணர்கள் ஆலோசனைகள் வழங்கினர். இதைத் தொடர்ந்து இந்த சம்பவம் தொடர்பாக 20 வயது மதிக்கத்தக்க இளைஞரை போலீசார் தேடி வந்தனர். சம்பவம் நடந்து கிட்டத்தட்ட இரண்டு மாதங்கள் கடந்த நிலையில் குற்றவாளியைக் கண்டறிய முடியாமல் திணறி வந்தனர்.

இந்த நிலையில் நேற்று சந்தேகத்தின் பேரில் 20 வயது இளைஞர் ஒருவரை போலீசார் விசாரணைக்கு அழைத்துச் சென்றனர். அதன் பிறகு அவர்தான் பாலியல் வன்முறையில் ஈடுபட்ட நபர் என்பதை போலீசார் கண்டறிந்தனர். விசாரணை முடியாத நிலையில் அவர் பெயலில் விடுவிக்கப்பட்டார்.

இது குறித்து கிரேட்டர் மான்செஸ்டர் போலீஸ் சி.ஐ.டி துப்பறியும் கான்ஸ்டபிள் கேட்டி ஷாட்வெல் கூறுகையில், “இந்த அதிர்ச்சியூட்டும் சம்பவம் பாதிக்கப்பட்டவருக்கு பெரும் வருத்தத்தையும் மன உளைச்சலையும் ஏற்படுத்தியது. அவருக்கு தேவையான உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன.

இந்த சம்பவம் தொடர்பாக ஒருவர் கைது செய்யப்பட்டிருந்தாலும், அவர்தான் செய்தார் என்பதை உறுதிப்படுத்த இன்னும் அதிக ஆதாரங்கள் தேவைப்படுகின்றன. எனவே, இது தொடர்பான தகவல் அறிந்தவர்கள் குற்றவாளிக்கு தண்டனை கிடைக்க முன் வர வேண்டும்” என்றார்.

இங்கிலாந்து செய்திகளை தமிழில் தெரிந்துகொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்…

Facebook : https://www.facebook.com/tamilmicsetuk/

Twitter : https://twitter.com/tamilmicsetuk