சென்னை பெண்ணை லண்டனில் வைத்து மதம் மாற்றம்..? ஜாகிர் நாயக் மீது புதிய குற்றச்சாட்டு

ஜாகிர் நாயக் (Image: One India Tamil)

சென்னை, 25 ஆகஸ்ட் 2020: லண்டனில் படித்து வந்த சென்னையைச் சேர்ந்த பெண் ஒருவரை பிரபல இஸ்லாமிய மத போதகர் ஜாகிர் நாயக்கின் ஆதரவாளர் ஒருவர் கடத்தி கட்டாய மத மாற்றம் செய்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

சென்னை ராயபுரம் பகுதியைச் சேர்ந்த தொழிலதிபர் ஒருவரின் மகள் லண்டனில் உயர்கல்வி பயின்று வருகிறார். கடந்த மே மாதம் 28ம் தேதி முதல் அந்த பெண்ணை காணவில்லை. இது குறித்து செய்வதறியாது திகைத்த அந்த பெண்ணின் தந்தை சென்னை மத்தியக் குற்றப்பிரிவு போலீசில் இது குறித்து புகார் செய்தார்.

மகள் லண்டனில் உள்ளார் என்பதால் இது குறித்து மத்திய உள்துறை, வெளியுறவுத் துறைக்கும் அவர் புகார் அளித்துள்ளார். அதில் மதம் தொடர்பாக அவர் சந்தேகம் கிளப்பவே இந்த புகார் மீது என்.ஐ.ஏ விசாரணையைத் தொடங்கியது. தொடர் விசாரணைக்குப் பிறகு அந்த பெண் லண்டனில் வசித்து வரும் வங்க தேசத்தைச் சேர்ந்த மத போதகர் நபீஸ் என்பவரால் கடத்தப்பட்டது தெரியவந்தது. அந்த மத போதகர் பிரபல இஸ்லாமிய போதகர் ஜாகிர் நாயக் உடன் தொடர்பில் உள்ளவர் என்று கூறப்படுகிறது.

இந்த கடத்தல் சம்பவம் ஜாகிர் நாயக் சொல்லி செய்ததாக கூறப்படுகிறது. எதற்காக அந்த பெண்ணை நபீஸ் கடத்தினார் என்ற விவரத்தை போலீசார் விசாரித்து வருகின்றனர். பணம் பறிப்பதற்காக இருந்தால் இந்நேரம் அந்த பெண்ணின் தந்தையைத் தொடர்புகொண்டு கேட்டிருக்க வேண்டும். மதம் மாற்றி பாலியல் அடிமையாக மாற்ற கடத்தப்பட்டாரா என்ற கோணத்தில் என்.ஐ.ஏ அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

நபீஸ்க்கு பயங்கரவாதிகளுடன் தொடர்பு உள்ளதா, இந்த கடத்தில் விவகாரத்தில் ஜாகிர் நாயக்கின் பங்கு என்ன என்றும் இந்திய போலீசார் விசாரித்து வருகின்றனர் என்று கூறப்படுகிறது. நபீஸ் வங்கதேச எம்.பி ஒருவரின் மகன் என்று கூறப்படுகிறது. ஜாகிர் நாயக் தற்போது மலேசியாவில் தஞ்சம் புகுந்து வசித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இங்கிலாந்து செய்திகளை தமிழில் தெரிந்துகொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்…

Facebook : https://www.facebook.com/tamilmicsetuk/

Twitter : https://twitter.com/tamilmicsetuk