வாடிக்கையாளர்கள் சிலருக்கு கொரோனா உறுதியானதைத் தொடர்ந்து பப் மீண்டும் மூடப்படுவதாக மூன்று பப் உரிமையாளர்கள் அறிவித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தொடர்ந்து இது...
நியூ பிரைட்டனில் கடல் சீற்றம் காரணமாக அலையில் சிக்கிய பெண் நீண்ட மீட்புப் பணிக்கு பிறகு பரிதாபமாக உயிரிழந்தார். அவருடன் அலையில் சிக்கிய நபர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். நியூ பிரைட்டனில் இன்று பிற்பகல் 50 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவரும், 20 வயது மதிக்கத் தக்க ஆண் ஒருவரும்...
15 வார ஊரடங்குக்குப் பிறகு ஸ்காட்லாந்தின் பியர் கார்டன்கள் மற்றும் நடைபாதை கஃபேக்கள் இன்று மீண்டும் திறக்கப்பட்டன. அதிக மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். அதே நேரத்தில் ஊரடங்குக்கு முந்தைய காலத்தில் இருந்ததை போன் அல் பிரஸ்கோ சாப்பிடுவது மற்றும் அருந்துவது இருக்காது என்று வாடிக்கையாளர்கள் எச்சரிக்கப்பட்டுள்ளனர். மிகக் கடுமையான சமூக இடைவெளி மற்றும் சுகாதார விதிமுறைகள் காரணமாக இந்த பியர் கார்டன்களுக்கு வருபவர்கள் தங்கள் பெயர் மற்றும் முகவரியை பதிவு செய்வது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. ஒருவேளை கொரோனாத் தொற்று மீண்டும் ஏற்பட்டால் வந்து சென்றவர்களைக் கண்டறிவது எளிதாக இருக்க பெயர் பதிவு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இங்கு பப் மற்றும் ரெஸ்டாரண்ட்கள் தங்கள் உள் அரங்கில் ஜூலை 15ம் தேதி முதல் வாடிக்கையாளர்களை அனுமதிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளனர். வாடிக்கையாளர்கள் மிகவும் பாதுகாப்பாக உணவு சாப்பிடுவது மற்றும் அருந்துவதை நிறுவன உரிமையாளர்கள் உறுதி செய்ய வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளனர். எடின்பெர்க் கோல்ட் டவுன் பியர் கார்டனுக்கு சென்ற ஸ்காட்லாந்தின் முதலமைச்சர் நிக்கோலா ஸ்டர்ஜியன் கூறுகையில், மீண்டும் இந்த...
ஸ்காட்லாந்து விலங்கியல் பூங்காவில் இன்று பிற்பகல் திடீர் தீவிபத்து ஏற்பட்டது. அதிர்ஷ்டவசமாக பணியாளர்கள், விலங்குகள் எதுவும் பாதிக்கப்படவில்லை என்று விலங்கியல் பூங்கா...
போதைப் பொருள் வைத்திருந்ததாக துபாயில் பணியாற்றி வந்த இங்கிலாந்தைச் சேர்ந்த இளம் பெண் கைது செய்யப்பட்டுள்ளார். உடல் பரிசோதனையில் போதைப் பொருள் பயன்படுத்தவில்லை என்று தெரிந்த பிறகும் அவரை விடுதலை செய்யாமல் துபாய் போலீசார் அலைக்கழித்து வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. துபாய் உள்ளிட்ட வளைகுடா நாடுகளில் போதைப் பொருள் வைத்திருந்தால் மிகக் கடும் தண்டனை வழங்கப்படும். இந்த நிலையில் பிரிட்டனைச் சேர்ந்த இளம் பெண் ஒருவர் போதைப் பொருள் வைத்திருந்ததாக துபாயில் கைது செய்யப்பட்டுள்ளார். துபாய் எமிரேட்ஸ் விமான நிறுவனத்தில் சிப்பந்தியாக பணியாற்றி வந்த டெரின் கிரவ்ஃபோர்டு என்ற பெண் தன்னுடைய பாய் ஃபிரெண்டுடன் முதன் முறையாக டேட்டிங் சென்று திரும்பிய நிலையில் கைது செய்யப்பட்டிருப்பது சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. டெரின் லிவர்பூலைச் சேர்ந்தவர். ஜூன் 21ம் தேதியில் இருந்து அவர் துபாயின் மிக மோசமான அல் பர்ஷா சிறையில்...
பப்கள் திறக்கப்பட்ட முதல் நாளிலேயே மது அருந்தியதால் ஏற்படும் குற்றங்கள் அதிகரித்துள்ளது. இதனால் பல பப்கள் பாதுகாப்பு காரணங்களுக்காக மூடப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. குடித்துவிட்டு தகராறு செய்ததாக ஆயிரத்துக்கும் மேற்பட்ட புகார்கள் போலீசாருக்கு வந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மூன்று மாத ஊரடங்குக்குப் பிறகு பப், சலூன்கள், ரெஸ்டாரன்ட், திரையரங்கு உள்ளிட்டவை நேற்று (சனிக்கிழமை) முதன் முதலாகத் திறக்கப்பட்டன. காலையில்...